உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் போட்டியில் இலங்கை வீரர் பெற்ற முதலிடம்!

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகளின் விவரம் வெளியாகியுள்ளது.

இதன்படி முதல் குழுவில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இரண்டாவது குழுவில் ஜிம்பாப்வே, பங்களாதேஷ், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளன.

குரூப் I இன் கடைசிப் போட்டியில் நமீபியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது இலங்கை. இதைத் தொடர்ந்து, 2022 ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பையின் குழு I இல் இலங்கை முதலிடத்தைப் பிடித்தது.

இலங்கையின் சுப்பர்-12 சுற்றுப் போட்டிகள் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

அதேநேரம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறும் சுற்றுப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் இந்த 3 போட்டிகளில் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார், மேலும் ஒரு ஓவரில் ரன் ஏதுமின்றி வீசினார்.