அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் செல்வன் ரவீந்திரன் திலுஷாந்த் தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தரம் 04 முதல் 09 வரையான மாணவர்களுக்கான அகில இலங்கை கணிதப் போட்டி யாழ்ப்பாணம் சிதம்பரப் பாடசாலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடத்தையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

லண்டன் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அந்த மாணவனுக்கு பேஸ்புக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.