கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் கழிவறையில் நேற்று (21) மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு செய்ததன் விளைவாக, யாரோ ஒருவர் கருவை கழிப்பறைக்குள் வீசியுள்ளனர்.
மாலையில் பள்ளி முடிந்து கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் கருவை பார்த்துள்ளார்.
இது தொடர்பில் பெம்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் அங்கு சென்று குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணையில் கரு பழையது என்றும் புதியது இல்லை என்றும் தெரியவந்தது.
கரு கண்டெடுக்கப்பட்ட கழிவறையை பாடசாலை மாணவிகள் பயன்படுத்தி வருவதாக பெமுல்லை பொலிஸார் தெரிவித்தனர்.