பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் தந்தை வெளியிட்ட தகவல் !

சப்ரகமுவ பல்கலைகழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம், பரகஸ்தோட்டை, பல்பொல ஆசாரிகொட வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றிய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் பல்கலைக்கழகத்தின் கபடி அணியின் தலைவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் உள்ளார்.

குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு சென்றதாகவும், பின்னர் தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது சகோதரியுடன் நள்ளிரவு வரை வீட்டில் கணினி பிழை தொடர்பில் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சப்ரகமுவ பல்கலைக்கழக சிங்கராஜா விடுதியில் உள்ள அறையில் நண்பர்கள் சிலருடன் உறங்கச் சென்ற ஹர்ஷ தனஞ்சய எழுந்திருக்காததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவனுக்கு வெளிப்புற காயங்களோ அல்லது விஷம் கலந்த உடலோ இல்லை என்று காவல்துறை கூறியது, ஆனால் மருத்துவ பரிசோதகர் இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் இறுதிக் கிரியைகள் நாளை 23ஆம் திகதி பல்பொல பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, தனது மகனின் உடலில் இதுவரை எந்த நோயும் இல்லை எனவும், உறங்கச் சென்ற தனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். சிறந்த விளையாட்டு வீரரான மகனுக்கு நரம்புகளில் ஏதேனும் வெடிப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் கவனிக்க வேண்டும். என் நிலை இன்னொரு தந்தைக்கு வரக்கூடாது. மேலும் எனது மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.