சற்றுமுன் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞர்!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவமானது இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் “நீர்கொழும்பில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.