யாழில் மாறி மாறி வெட்டிக்கொண்ட கணவன் மனைவி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கத்தியால் வெட்டிக் கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினையால் வாய் தகராறு முற்றியதால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார்

அதே கத்தியை எடுத்து கணவரை மனைவி வெட்டியுள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.