வவுனியா பிரமிளா படுகொலை; சந்தேகநபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

வவுனியாவில் 21 வயது யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் வீட்டில் இருந்து வெளியே வந்த 21 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் வசித்த நெடுங்கேணி பிரதேசத்தில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞன் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுங்கேணி சிவா நகரைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (வயது 21) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் அவரது தாயார் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி இலக்கங்களின் தரவு அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.