வவுனியாவில் திடீரென களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!

வவுனியாவில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் போதை மாத்திரைகள் விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பில் வடக்கு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் உத்தரவின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.