கஷ்டமா இருக்கு… பிக் பாஸில் கேமரா முன் தேம்பி தேம்பி அழுத இலங்கை பெண் ஜனனி!

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாய்ஸ் டாஸ்க் நடத்தப்படுவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீடு போர்க்களம் போல் நடந்து வந்தது. இதில் ஷெரீனாவுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, ஒருவருக்கு ஒருவர் தகராறு செய்து வருகின்றனர்.

இன்றைய பொம்மை டாஸ்க் முடிவடைந்து வெற்றி பெற்ற மூன்று போட்டியாளர்கள் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு நடுவே, சொகுசு பட்ஜெட் பணி நடந்து வந்தது. இதில் மணிகண்டன், ஜனனி, ரசிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பொம்மை டாஸ்க் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்படாத போட்டியாளரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். இறுதியில், ஷிவினும் அசீமும் பிக்பாஸை மோசமான பெர்ஃபார்மர் என்றும், இந்த வாரம் சிறப்பாக செயல்படாத நபர் என்றும் சிறைக்கு அனுப்பினார்கள்.

இதையடுத்து ஜனனி கேமரா முன் சென்று கஷ்டம், என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக இருப்பது போல் கதறி அழுதார்.