யாழில் சிறுமியின் சங்கிளியை அபரித்த கொள்ளையர்களை மடக்கிபிடித்த இளைஞர்கள் : கெளரவித்த பொலிஸார்!

யாழில் சிறுமி ஒருவரின் தங்க சங்கிளியை அபகரித்து சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்த இளைஞர்களின் துணிகர செயலை பாராட்டி அவர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பொலிஸார் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த நிலையில் சங்கிலியை திருடிய நபரை பிடித்தவர்களுக்கு பலாலி பொலிஸாரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் காயத்ரி சிறீராம், திருவள்ளுவர் சனசமூக நிலைய நிர்வாகம், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.