யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.