கினிகத்தேன – அபாடின் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேன அபாட் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வசித்து வந்த 34 வயதுடைய நுவன் சேரன பிரேமச்சந்திர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்த இளைஞன் அபெர்டீன் நீர்வீழ்ச்சியைக் காண்பிப்பதற்காக உறவினர்கள் குழுவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குறித்த இளைஞன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதிக்கு குதித்து நீந்திச் சென்ற போது அபாடின் நீர்வீழ்ச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.