யாழ் மழைவீழ்ச்சி பதிவை வெளியிட்ட அதிகாரி!

நேற்று (30.10.2022) காலை 8.30 முதல் திங்கட்கிழமை (31.10.2022) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சியின் பிரகாரம், அச்சுவேலியில் 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலைய அதிகாரி ஆர்.பிரதீபன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த காலப் பகுதியில் வடமராட்சி அம்பனில் 53.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 38.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரப் பகுதியில் 37.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 35.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கோட்டையில் 27.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 25.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.