சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் !

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய விளையாட்டு பயிற்றுவிப்பாளரை கைது செய்வதற்கான விசாரணைகளை கெகிராவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 14 மற்றும் 16 வயதுடைய 6 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கெக்கிராவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.