மட்டக்களப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவி : வெளியான காரணம்!

மட்டக்களப்பில் 19 வயது மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டக்களப்பு 4ம் குறுக்கு வீதி வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த (19) வயதுடைய கணேசலிங்கம் விதுஷயா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்பகுதியில் பிள்ளையின் தாயார் மகளை கோவிலுக்கு கூப்பிட்ட வேளையில் தான் வரமாடடேன் என கூறியதையடுத்து தாயார் வேலைநிமத்தம் காரணமாக வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து தாயார் வீட்டிற்கு வந்த பார்த்த போது மகள் தனது படிக்கும் அறையில் தூக்கிட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் மகளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட வேளையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பிரதி நீதிபதி வி.தியாகேஸ்வரனின் உத்தரவின் பிரகாரம் மண்டூர் பிரிவு திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவகுமார் சடலத்தை பார்வையிட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.