புதிய திட்டத்தை அமுல்படுத்திய கனடா அரசு!

2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 02 வருடங்களுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கனடாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 09 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.