நியூசிலாந்திலிருந்து இலங்கை வந்த ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபா வாங்கிய சாரதி!

நியூசிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரிடம் முச்சக்கரவண்டி கட்டணமாக 150,000 ரூபாவை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (01) உத்தரவிட்டார்.

பிப்ரவரி 11, 2020 அன்று, நியூசிலாந்து தேசிய காவல்துறை சுற்றுலாப் பிரிவில் நடந்த சம்பவத்தை அவர் புகார் செய்தார்.

தெல்கொட கஹுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான திலின மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரஜையான முறைப்பாட்டாளர் கப்பல் மூலம் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் சந்தேக நபரிடம் கொழும்புக்கான கட்டணம் குறித்து கேட்டறிந்தார்.

கொழும்பு நகரை காட்ட 20 டொலர்களை கேட்டதாகவும், இலங்கையில் ஒரு டொலரின் பெறுமதி 4500 ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த தொகையை ரூபாவில் செலுத்துமாறு சந்தேகநபர் நியூசிலாந்தரிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.