யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக B+ மற்றும் O+ ரத்தத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இரத்த தானம் செய்ய விரும்பும் இரத்த தானம் செய்பவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள இரத்த வங்கியிலும் வாயில் இலக்கம் 12 ஊடாகவும் தினமும் காலை 08:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரில் இரத்ததானம் செய்யலாம்.

மேலும் தகவல் தேவைப்படுவோர் அல்லது இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவோர் 0772105375 மற்றும் 0212223063 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவவுனியாவில் களமிறக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள்!
Next articleகவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த லாஸ்லியா!