இலங்கைக்கு அரிசி நன்கொடை !

500 MT (50,000 பொதிகள்) அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசி நேற்று (4) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியானது கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் 6,000 மெட்ரிக் தொன் (600,000 பொதிகள்) அரிசி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.