மீண்டும் பிரதமராக அமரும் மகிந்த; அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்துவது மற்றும் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மிகக்குறுகிய காலத்திற்குள் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும் இறுதி உடன்பாடு எட்டப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல கட்சிகள் பல தலைமைகளின் கீழ் இயங்கி வருவதாகவும் பெரும்பாலான கட்சிகள் அரசியலில் முன்னேறுவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.