அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் அதிரடி கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டு இந்திய படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைமன்னார் வடக்கு கடற்கரையில் கடற்படையினரால் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளும் பதினைந்து (15) இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்சார் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.