எகிப்துக்கு பறந்தார் ஜனாதிபதி !

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை எகிப்து சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஷர்ம் எல்-ஷேக், எகிப்தில் அடுத்த வாரம் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27) 27வது அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவார்.

சிஓபி27 மாநாடு ஷர்ம் அல்-ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று முதல் நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.