நுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!

நுவெரெலியாவில் சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவழத்துள்ளனர்.

இச்சம்பவமானது நுவரெலியா மாவட்டம் – கொத்மலை, வெதமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள கால்வாயை கடக்க முயன்ற போது சிறுமி நீரிழ் அடித்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

வெதமுல்ல – ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.