இழுத்து மூடப்பட்ட யாழ் விமான நிலையம்..! பின்னணியில் இந்தியா !

யாழ்ப்பாணம் பலாலியில் விமானத்தை தரையிறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி செய்தியாளர் சந்திப்பின் போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்தும் செயற்படாதது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால், விமானங்கள் வர தயாராக இல்லாத நிலை உள்ளது.

இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயாராக இல்லை. அதனால், விமான நிலையம் செயல்பட முடியாத நிலையில் உள்ளது,” என்றார்.

அப்போது, ​​யாழ்.சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் தென்பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதா என வினவிய போது,

அது முற்றிலும் தவறான தகவல். யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எங்கும் எதுவும் கொண்டு செல்லப்படுவதில்லை.

இந்திய விமான நிறுவனங்கள் பலாலியில் தங்கள் விமானங்களை தரையிறக்கத் தயாராக இருந்தால், நான் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை ஒரே இரவில் இயக்க முடியும், ”என்று அவர் கூறினார்.