இலங்கையில் காதலி திருமணத்திற்கு மருத்ததால் தீ குளித்துகொண்டு காதலியை கட்டிபிடித்த காதலன்!

காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த இளைஞன் ஒருவர் தீக்குளித்து காதலியை கட்டிப்பிடிக்க முயற்சித்த போதிலும் தோல்வியடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள முடியாமல் வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

முஸ்கெலியா ரதர்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ருஹுனு குமாரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் அவர் மொரட்டுவ பிரதேசத்தில் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

கட்டுபெத்த சந்தியில் உள்ள தனது காதலியின் பணியிடத்திற்கு சென்ற நபர், கடையின் உரிமையாளரிடம் தனது காதலி எங்கே என்று கேட்டுவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் நெருப்புடன் வெளியே வந்து தனது காதலியை அணைத்துக் கொண்டார். அப்போது, ​​தீப்பற்றி எரிந்த பெண்ணை பார்த்தவர்கள் காப்பாற்றினர்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய காதலன் மறுநாள் வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மஸ்கெலியாவைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.