யாழில் இன்றுகாலை இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை!

யாழ். வடமராட்சி பகுதியில் இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 126 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.