இனி நாட்டில் உள்ள அனைத்த பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு காலை உணவு!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் தற்போது கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 26 வீதமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.