நெடுந்தீவு லக்ஸ்மன் காலமானர் !

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திர லக்ஷ்மணராஜா இன்று வியாழக்கிழமை காலமானார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட “நெடுந்தீவு லக்ஷ்மன்” என பிரபலமாக அறியப்படும் ஊடகவியலாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் நாகேந்திர லக்ஷ்மணராஜா, தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியாவார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் செய்தித்தாள்கள் மற்றும் தேசிய பத்திரிகைகளில் சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.