யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

யாழ். இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் யாழ். பொலிசார் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் காரில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.