பெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து தள்ளும் உயர் அதிகாரி!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, களுத்துறையில் இருந்து காலிமுகத்திடலுக்கு நடைபவனியாக சென்ற இரண்டு பெண்களை பாணந்துறை கொரகபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் போராட்டத்தில் போலீசார் தலையிட்டதால், பெண்களை கைது செய்ய பல மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது பெண் பொலிஸாரிடம் உயர் பொலிஸ் அதிகாரி நடந்து கொண்ட விதம் தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை கழுத்தில் பிடித்து தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.