தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக்கின் தாயார் பிணை கோரி போராடி வருகிறார்.

இதற்காக தனுஷ்காவின் தாயார் நேற்று அம்பலாங்கொடை கடற்கரைக்கு சென்று தனது மகனின் விடுதலைக்காக ஆமை குட்டிகளை கடலில் விடுவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக் தற்போது அவுஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜாமீனில் விடுவிக்க வழக்கறிஞர்களும் அணியினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.