கனடாவின் மாண்ட்ரீல் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் லேசாக மோதிக்கொண்டன.
நேற்று, மாண்ட்ரீலின் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விபத்து நடந்தது.
என்ன நடந்தது என்றால், விமானம் ஒன்று ஸ்தம்பித்த பகுதியில் இருந்து புறப்பட முற்பட்ட போது, அதன் இறக்கை நிலையாக இருந்த விமானத்தின் மீது மோதியது.
மோதியதில் பயணிகள் விமானம் லேசாக குலுங்கியது என்று அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவரான டேவ் கோட் கூறினார்.
உடனடியாக, பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி, ஓட்டல்களில் தங்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.