இலங்கையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் பருத்துறைக்கு அருகில் இன்று (16-11-2022) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.