மன்னார் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் விடுதலை !

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 6ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 14 வயது சிறுவனை எதிர்வரும் 7ஆம் திகதி சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. .

இந்த நிலையில், குறித்த 15 பேரும் வியாழக்கிழமை (17) மன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 14 இந்திய மீனவர்களும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள 14 வயது சிறுவனும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

விசாரணையில், மன்னார் மாஜிஸ்திரேட், தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து மீனவர்களை விடுதலை செய்தார்.

இந்த நிலையில், குறித்த 15 பேரையும் மிகிரியாகம முகாமிற்கு அனுப்பிவைத்து அவர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் படகொன்றின் உரிமையாளர் இன்று (17) மன்னார் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக ஆஜராகி தனது படகை விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், மன்னார் மாவட்ட கடல்சார் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு படகின் உரிமையாளருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.