பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ். இளைஞர்கள் : வெளியான காரணம்!

போலி விசாவைப் பயன்படுத்தி இங்கிலாந்து செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணம், சவுகச்சேரி மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் இலங்கையர் 3 பேரும் தங்களுடைய குடிவரவு சம்பிரதாயங்களை சரிசெய்வதற்காக விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுன்டருக்கு வந்துள்ளனர்.

பணியில் இருந்த குடிவரவு அதிகாரிகள் அவர்களது பயண ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​அந்த விசாக்கள் போலியானது என தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.