சட்டவிரோதமாக எல்லைத்தாண்டிய இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

இந்த வருடம் மட்டும் எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 228 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர்கன் எல்லைத்தாண்டி சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 30 மீன்பிடி படகுகளும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.