கனடாவில் பெண் மருத்துவரின் மோசமான செயல்: நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்மண்டனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் யிப்பி ஷியாவுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ஆல்பர்ட்டா வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ மோசடியில் ஈடுபட்டதாக மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் போது மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் 827077 டொலர்களை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான நோயாளிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

உளவியல் மருத்துவ ஆலோசனை வழங்குவதாக கூறி தொண்டு நிறுவனத்திடம் பணம் பெற்றும் பெண் மருத்துவர் கிராமப்புற சேவைகளை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னைப் பார்க்க வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உளவியல் ஆலோசனை வழங்குவதாகக் கூறி பணம் பெறுகிறார்.

மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பண பேராசையால் இவ்வாறு செய்ததாக பெண் மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.