யாழில் பிறந்து 50 நாட்களான பெண் குழந்தை பரிதாபமாக பலி : வெளியான காரணம்!

யாழில் பிறந்து 50 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது சாவகச்சேரியில் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பெண் சிசு அசைவின்றி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெற்றோர் சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிசு ஏற்கனவே உயிரிழந்து வட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இன்மையால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.