வயதான தாய் ஒருவரை வீதியில் இறக்கிவிட்டுச்சென்ற நபர் : பொலிஸார் தீவிர விசாரணை!

இரத்தினபுரி பிரதேசத்தில் வயோதிப தாய் ஒருவர் வீதியில் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வயதான தாயை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் இரத்தினபுரி பகுதியில் வீதியொன்றில் அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தகவலையடுத்து இரத்தினபுரி பொலிசார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன் தற்போது களவாணி தாதியர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயதான தாயை வீதியில் விட்டுச் சென்ற நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்குமாறு இரத்தினபுரி பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.