ஆற்றில் குதித்த இளம் ஜோடி-யுவதி சடலமாக மீட்பு!

கம்பஹா மினுவாங்கொடை ஒபாத்த, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக பாயும் தெதுருஓயா ஆற்றுக்கிளையில் இளம் தம்பதியொன்று குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் குதித்த இருவரிடமிருந்து இன்று காலை யுவதியின் சடலம் மீட்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடை யட்யான பிரதேசத்தைச் சேர்ந்த கே.லக்சனி தில்மிகா கீர்த்ரத்ன என்ற 25 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை சமுர்த்திகம நுககஹமுல்ல பாலத்திற்கு அருகில் உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கிராம சேவகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆற்றில் குதித்த போது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஏழு மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேறி நெத்தகமுவ பிரசேத்தமிலுள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவருடன் வசித்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதனையடுத்து சடலத்தை வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை மற்றும் திடீர் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், மினுவாங்கொடை பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.