இலங்கையில் புடவையை தூக்கி எறிந்த ஆசிரியர்கள்..!

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் இன்று (21) புடவைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேலை அணிவதற்கான செலவு அதிகம் என்பதால், வேறு ஆடைகளுக்கு மாறுகிறோம் என்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,

எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடை உடுத்தும் உரிமைக்கு அமைவாக அரச நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் அணியும் புடவையை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.