கனடாவில் மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த இலங்கை தமிழர்! விசாரணை தீவிரம் !

பிரிந்து சென்ற மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

செப்டம்பர் 11, 2019 அன்று, சசிகரன் தனபாலசிங்கம் தனது பிரிந்த மனைவி தர்ஷிகா ஜெகநாதனை வாளால் வெட்டிக் கொன்றார்.

அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் பெண் ஒருவரை வாளுடன் துரத்துவதாக பல்வேறு முறைப்பாடுகள் வந்ததையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது குறித்த பெண் கத்தியால் பல தடவைகள் சரமாரியாக வெட்டப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சசிகரன் காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஓரானியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இதற்காக சசிகரன் மீது முதல்கட்ட கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகரனும் தர்ஷிகாவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர் மற்றும் அவர்களது திருமணம் நவம்பர் 1, 2015 அன்று இந்தியாவில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டில், தர்ஷிகா தனது கணவருடன் கனடாவுக்கு வந்து சில வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் செப்டம்பர் 11, 2019 அன்று, அவர் சசிகரனால் படுகொலை செய்யப்பட்டார்