இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்களை பார்க்க வந்துள்ள இந்தியர்கள் !

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையில் உள்ள இடங்களை பார்வையிடுவதற்காக இந்திய சுற்றுலா பயணிகள் இன்று பிற்பகல் இலங்கை வந்துள்ளனர்.

தேச மங்கையர்க்கரசி தலைமையில் இந்த சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் தவிர இலங்கையில் அமைந்துள்ள சைவக் கோயில்களுக்கும் இந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் செல்ல உள்ளனர்.

எதிர்வரும் ஆறு மாதங்களில் இவ்வாறான 800 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்த சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் லிடன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.