இன்று யாழிற்கு வந்த பாகிஸ்தான் தூதுவர் !

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இன்று (23.11.2022) யாழ். வடமராட்சியில் உள்ள சக்கோட்டை முனைக்கு விஜயம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் தூதுவரின் சகாக்கள் சகிதம் வருகை தந்த போது அவருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பூதி துதர எல்லை குறித்து விசாரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கிக்கும், யாழ். மாநகர சபை முதல்வர் வே.மணிவண்ணனுக்கு இடையில் நேற்று (22.11.2022) சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.