கனடாவில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு ஏற்பட்ட துயரம்: ஆபத்தான நிலையில் ஒருவர்

ஒன்ராறியோவின் கிழக்கு பீட்டர்பரோவில் இடம்பெற்ற சாலை விபத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்தில் தாய், தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது மகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்ராறியோ பிராந்திய பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த விபத்து செவ்வாய்கிழமை மாலை 5:15 மணியளவில் டிரம்மண்ட் லைனுக்கு அருகில் நெடுஞ்சாலை 7 இல் நடந்துள்ளது.

இதில், ஒரு எஸ்யூவி மற்றும் பிக்-அப் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பின்னர் பிக்-அப் டிரக் ஓட்டுநரை போலீசார் அடையாளம் கண்டனர்.

மேலும், விபத்தில் பலியானவர்கள், ஸ்டெபானி ஹார்ட், ஜொனாதன் மக்டோனல் மற்றும் அவர்களது 18 வயது மகன் ரிடிக் ஹார்ட் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். அவர்களுடன் இருந்த 14 வயது ரோகன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.