கனடாவில் பட்டப்பகலில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஏற்பட்ட துயரம் !

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் 18 வயது இந்திய வம்சாவளி இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான்.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 17 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதில் மெஹக்ப்ரீத் சேத்தி என்ற இளைஞர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேக நபர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.