வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (Video)

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், உயிரிழந்த கிருதரனின் மனைவி தனது கணவரின் சடலத்தையாவது அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த கிருதரனின் மனைவி எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், கணவரின் சடலத்தை இங்கு கொண்டு வருவதற்கு 30 இலட்சம் ரூபா வரை கையெழுத்திடுமாறு என்னிடம் கோரினர்.

அந்த 30 லட்சம் என்னிடம் இருந்தால் நான் ஏன் என் கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும்? நான்கு குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும், தனக்கு கடன் பிரச்னை இருப்பதாகவும், அவர்களை போக்க வேண்டும் என்றும் கூறி என் கணவர் கடல் கடந்தார். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எனது குழந்தைகளுக்கு தந்தை இல்லை என்பதை காட்ட அவரது உடலை எங்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதே எனது கடைசி வேண்டுகோள்.