யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களின் ஒழுங்கமைப்பில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ். பருத்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

முனியப்பர் கோயிலில் இருந்து சுப்பர்மடம் மேள தாளத்துடன் சுப்பர்மடம் பொது மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் சிலைகளுக்கு ஈகை திரையிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது