கனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடையவர் கைது !

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் இடம்பெற்ற தொடர் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை டொரண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இரண்டு பெண்களை கொலை செய்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஜோசப் ஜோர்ஜ் சவுதர்லேண்ட் என்ற 61 வயதுடைய நபரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

45 வயதான சூசன் டைஸ் மற்றும் 22 வயதான எரின் கில்மோர் ஆகியோர் டிசம்பர் 1983 இல் டொராண்டோ/டைஸ்-கில்மோர்-கோல்ட்-கேஸ்-கொலைகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

விசாரணையின் காரணமாக சந்தேகநபர் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.