வழமைக்கு திரும்பிய இ.போ.ச பேருந்து சேவைகள்!

இ.போ.ச பேருந்து வடக்கு பிராந்திய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன் காரணமாக வட மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளன.